இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆம் ஆண்டின் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் (SIH - Smart India Hackathon) இறுதிச் சுற்றில் பங்கு பெற்ற பங்கேற்பாளர்களுடன் காணொளி வாயிலாக உரையாற்றினார்.
இந்த SIH ஆனது இந்திய அரசின் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், பெர்சிஸ்டன்ட் அமைப்பு மற்றும் i4C ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்பட்டது.
SIH ஆனது நமது அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சில சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வேண்டி மாணவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட தேசிய அளவிலான ஒரு முன்னெடுப்பாகும்.
இது ஒரு கருத்துரு குறித்த புத்தாக்கக் கலாச்சாரம் குறித்து கற்பிப்பதையும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மனநிலையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
SIHன் முதலாவது பதிப்பானது 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது-