TNPSC Thervupettagam

‘ஒரே தேசம், ஒரே தர அளவு திட்டத்தில்’ இணையும் RDSO

June 5 , 2021 1523 days 897 0
  • மத்திய அரசின் ‘ஒரே தேசம், ஒரே தர அளவு’ திட்டத்தில் இணையும் நாட்டின் முதல் தர நிலை அமைப்பாக ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலை அமைப்பானது (Research Design and Stands Organisation - RDSO) உருவெடுத்துள்ளது.
  • இரயில்வே அமைச்சகத்தின் முதன்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவான RDSO இந்திய இரயில்வே துறைக்கான தரநிலைகளை நிர்ணயிக்கிறது.
  • தற்போது RDSO அமைப்பினை மூன்று ஆண்டு காலத்திற்கு ஒரு தரநிலை மேம்பாட்டு அமைப்பாக நிர்ணயித்து இந்தியத் தரநிர்ணய வாரியம் ஒரு அங்கீகாரத்தினை  வழங்கியுள்ளது.

குறிப்பு

  • இந்தியத் தரநிர்ணய வாரியமானது (Bureau of Indian Standards – BIS) ‘ஒரே தேசம், ஒரே தர அளவு என்ற திட்டத்தினை அமல்படுத்தும் ஒரு நிறுவனமாகும்.
  • தற்போது ரயில்வே துறையின் சரக்கு மற்றும்  சேவைகளின் தரத்தினை உறுதி செய்வதற்கான பரிமாணங்களை RDSO மற்றும் BIS ஆகியவை இணைந்து வரையறுக்கும்.
  • ஒரே தேசம், ஒரே தர அளவுதிட்டமானது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • நாட்டின் உற்பத்திப் பொருளுக்குப் பல்வேறு நிறுவனங்கள் தர நிர்ணயம் செய்வதற்குப் பதிலாக ஒரே ஒரு தர நிர்ணயத்தை மட்டும் உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • இதுஇந்தியத் தரம்எனும் ஓர் அடையாளத்தைப் பிற்காலத்தில் நிலைநிறுத்த உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்