இந்திய இராணுவமானது, புதிய வடிவமைப்பு கொண்ட மற்றும் உருமறைப்பு வடிவச் சீருடையின் உரிமத்தினைக் கோருவதற்காக வேண்டி அதற்கான அறிவுசார் சொத்து உரிமையினைப் பெறுவதற்கு (IPR) பதிவு செய்துள்ளது.
இந்திய இராணுவ வீரர்களுக்கான புதிய டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்ட போர்க்களச் சீருடையானது, 2022 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி இராணுவ தினத்தன்று வெளியிடப்பட்டது.
இந்தச் சீருடையானது சமகாலத் தோற்றம் மற்றும் செயல்பாடு சார்ந்த வடிவமைப்பு கொண்டது.
இந்த உடையின் துணியானது இலகுவாகவும், வலிமையாகவும், காற்று ஊடுருவக் கூடியதாகவும், விரைவாக உலர்த்தக் கூடியதாகவும், பராமரிக்க எளிதான வகையிலும் செய்யப் பட்டுள்ளது.