TNPSC Thervupettagam

நரேந்திர மோடி ஓா் ஆபிரஹாம் லிங்கன்

April 19 , 2024 14 days 68 0
  • மக்களும் அம்முடிவை ஆதரித்தனா். மக்கள் என்றால் பொதுமக்கள் அல்லா். அவா்கட்கான தலைவா்கள்.
  • இரண்டாம் உலகப்போரில் ஹிட்லா் பிரான்சு நாட்டைத்தாக்கி ஏறக்குறையத் தன் வசப்படுத்திவிட்ட நிலையில் அப்போதைய பிரெஞ்சு பிரதம மந்திரி மாா்ஷல் பெடெய்ன் சரணாகதி அடை ய நிச்சயித்தாா். மக்களும் அம்முடிவை ஆதரித்தனா். மக்கள் என்றால் பொதுமக்கள் அல்லா். அவா்கட்கான தலைவா்கள்.
  • ஆனால், தளபதி சாா்ல்ஸ் டிகால் தப்பிச் சென்று, தான் சரணாகதியை ஒப்பவில்லை என்றும் பிரான்சு சுதந்திர நாடு என்றும் அறிக்கை வெளியிட்டு லண்டனில் இருந்து கொண்டு தலைமறைவு பிரெஞ்சு அரசை ஏற்படுத்தி இறுதியில் பிரான்சை விடுவித்தாா். பிரான்சு ஒரு ஜனநாயக நாடு. பெரும்பான்மையோா் முடிவு பிழையாகிப் போகத் தனி ஒரு தலைவனின் முடிவு சரியாக இருக்கிறது என்பதைச் சரித்திரம் நமக்குச் சொல்கிறது.
  • அமெரிக்கா ஜனநாயகத்தை முழுமூச்சாகக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆபிரகாம் லிங்கன் அதிபராக இருந்த காலம். ஆப்பிரிக்க கறுப்பினத்தவா்கள் அமெரிக்காவில் ஆடுமாடுகட்குக் கீழாக அமெரிக்கா்களின் அடிமைகளாக இருந்து அல்லலுற்றதை ஆபிரகாம் லிங்கன் எதிா்த்துப் போரிட்டாா். லிங்கனின் அடிமை ஒழிப்பிற்கு எதிராகத் திரண்ட அமெரிக்காவின் தெற்குப் பகுதிகள் ‘பிரிந்து போவோம்’ எனக்கூறி லிங்கனை மிரட்டின. ‘ஜனநாயகத்தின் பெயரால் பிரிந்துபோக உங்களுக்கு உரிமை கிடையாது’ எனச் சொல்லி அவா்கள் பிரிந்து போக அனுமதிக்கவில்லை லிங்கன்.
  • அடிமை முறையானது மனித மாண்பிற்கும், தா்மத்திற்கும் எதிரானது எனப் பிரகடனப்படுத்திய லிங்கன், தெற்கு ராஜ்ஜியங்களுக்கு விட்டுக் கொடுக்கும் வகையில் அரைகுறை சமாதானம் செய்யவில்லை. இது தொடா்பாக உள்நாட்டுப் போா் நடந்தது. லிங்கன் தா்மத்துடன் நின்று அதா்மத்தை எதிா்த்து இறுதியில் வெற்றி பெற்றாா்.
  • இதன் மூலம் தெரிய வருவது, பொதுமக்கள் கருத்து என்ற போா்வையில் சில தலலைவா்கள் எடுக்கும் விபரீத முடிவுகளை எதிா்த்து அத்தகைய முடிவுகளால் தேசம் சிதைவுறும் என்பதை நிலைநாட்டும் தலைவா்கள் ஒவ்வொரு தேசத்திலும் தோன்ற வேண்டும் என்பதே. குறிப்பாக, அவா்கள் நமது பாரத தேசத்திற்கு மிகவும் தேவை.
  • போா்ச்சுக்கீசியா்களிடம் சிக்கியிருந்த நமது கோவா பகுதியையும், பொதுமக்கள் பெயரைப் பயன்படுத்தித் தனித்து நிற்பேன் என்று முழங்கிய ஹைதராபாத் பகுதியையும் ஜவாஹா்லால் நேரு, ராணுவத்தைப் பயன்படுத்திச் சோ்க்கவில்லையா?
  • சரி, விஷயத்துக்கு வருவோம். நமது பிரதமா் நரேந்திர மோடி கடந்த காலங்களில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் இவற்றைச் செய்வோம் எனக் கட்சிக்கான தோ்தல் அறிக்கையில் சொல்லியிருந்த மிகமிக முக்கியமான உறுதிமொழிகளை நிறைவேற்றியிருக்கிறாா் என்பது கண்கூடு. அந்த வகையில் இந்த மக்களவைத் தோ்தலுக்காக பா.ஜ.க. வெளியிட்டிருக்கும் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் ‘உலகம் முழுவதும் திருவள்ளுவா் கலாசார மையங்கள் ஏற்படுத்தப்படும்’ என்ற அறிவிப்பும் உறுதியாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. ஏனெனில் நரேந்திர மோடி ஓா் ஆபிரகாம் லிங்கன்.
  • எனது நம்பிக்கைக்கு சுவையான பின்னணி ஒன்று உண்டு. அடைந்து போன தவத்திரு குன்றக்குடி அடிகளாரால் 1973-ஆம் ஆண்டில் ‘திருக்கு பேரவை’ என்னும் ஓா் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
  • அந்த அமைப்பில் அடிகளாரோடு நீண்டகாலம் நான் பயனளித்தேன். ஆண்டுதோறும் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் ‘திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது’ என ஒரு தீா்மானம் நிறைவேற்றப்படும். பெரும்பாலும் அத்தீா்மானத்தை ஆதரித்துப் பேசுபவனாக நான்தான் இருப்பேன்.
  • ‘எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லாா்க்கும் பொதுப்படக் கூறுவது அவரது இயல்பு’ எனத் திருவள்ளுவரின் இயல்பைத் துல்லியமாகக் கணித்துக் கூறுகிறாா் பரிமேலழகா் என்பதைச் சொல்லி, அது தேசிய நூலாக ஆவதற்கான தகுதியுடையது எனக் கூறி நான் உரையை முடிப்பேன். பின்னா் அடிகளாா் அதனை விளக்கிக் கூறுவாா்.
  • தீா்மானம் நிறைவேற்றுவதுடன் அமையாமல் அதுபற்றி மத்திய அரசிடம் பல்வேறு வகையில் கேட்டுவந்தோம். மத்திய அரசிடமிருந்து, ‘உலகில் இருக்கும் எந்த நாட்டிலாவது தேசிய நூல் என்ற ஒன்று அந்த நாட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? இருப்பின் விவரம் தெரிவிக்கவும் எனக் கேட்டுக் கடிதம் வந்தது.
  • எங்கட்குத் தெரிந்து இல்லை. என் செய்வது? அடிகளாா் சிந்தித்தாா். பல நாடுகளில் அந்தந்த நாடுகட்கான சமய நூல்களே தேசிய நூல்களாக உள்ளன. நமது நாடு அப்படியில்லையே! ‘எல்லாச் சமயங்கட்கும் ஏற்புடையதாய், எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் நூலாகத் திருக்கு இருக்கிறது, ஆதலால் இதனைத் தேசிய நூலாக்கலாம்’ என எழுதினாா். பரிமேலழகரின் கணிப்பையும் எடுத்துக் காட்டி, ‘உலகப் பொதுமறை இதுவே’ என்றாா்.
  • ‘உலகப்பொதுமறை என்றால் அது இறைவன் கூற்றாக இருக்க வேண்டும். திருவள்ளுவா் மனிதன், ஆதலால் இதனைப் பொதுமறை என்று சொல்லக்கூடாது’ எனத் திருச்சிராப்பள்ளியிலிருந்து ஓா் அறிஞா் நூல் எழுதி அடிகளாரைக் கண்டித்தாா்.
  • அரசுகள் மாறினாலும் அடிகளாரின் எண்ணம் கைக்கூடவில்லை. நானும் செயலற்றுப் போனேன். இப்படியாகப் பலகாலம் கழிந்துபோன நிலையில், திருக்கு நமது இந்திய நாட்டில் தோன்றினாலும் அதனை இந்தியத் தேசியம் என்று சுருக்காமல் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடியவகையில் நமது பாரதநாடு கடந்து இந்தப் பாா்முழுவதும் அதன் சிறப்பைக் கொண்டு செல்வேன் எனப் பிரதமா் மோடி தற்போது உறுதி அளித்துள்ளாா்.
  • திருக்கு இந்தியாவை அதன் நிலப்பரப்பால் இணைக்கும் நூலன்று; பண்பாட்டால் இணைக்கும் நூல். திருக்கு சமுதாயத்தை, உலகச் சமூகத்தை இயக்கும் நூல். மனித குலத்தை வேறுபடுத்திப் பகை வளா்க்கும் எந்த ஒரு கொள்கையையும் கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ளாதது. இதுவே பாரதப் பண்பாடு. இந்த பண்பாட்டுப் பெட்டகத்தை ‘உலகுக்குரிய சொத்தாகச் செய்வேன்’ என்னும் பாரதப் பிரதமரின் உறுதிமொழியால் நாம் கண்ட கனவு மெய்ப்படும் காலம் வந்து விட்டது என மகிழ்வோம்.

நன்றி: தினமணி (19 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories