TNPSC Thervupettagam

விமானப் படைத் தாக்குதலுக்கு பழமையான போர் விமானம் மிராஜ்-2000ஐ தேர்வு செய்தது ஏன்?

February 26 , 2019 1908 days 1451 0
  • செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இந்திய எல்லையில் இருந்து புறப்பட்ட பனிரெண்டு மிராஜ் - 2000 போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இயங்கி வந்த பயங்கரவாத பயிற்சி முகாம்களை தாக்கி அழித்துவிட்டு திரும்பின.
  • இந்த தாக்குதல் தொடர்பான செய்திகள் வெளியாகத் தொடங்கியதும், சிலர், இந்திய விமானப் படையில் பல அதிநவீன போர் விமானங்கள் இருக்கும் நிலையில், மிகப் பழமையான மிராஜ் ரக போர் விமானம், இந்த அதிரடித் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது ஏன் என்று கேள்விகள் எழுப்பினர்.
  • இந்திய விமானப் படையில் அதி நவீன போர் விமானங்களாக சு-30எம்கேஐ மற்றும் மிக்-29 என ஏராளமான புதிய ரக விமானங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்கு மிகவும் பழமையான மிராஜ்-2000  போர் விமானத்தையே இந்திய விமானப் படை விமானிகள் தேர்வு செய்துள்ளனர்.
  • இந்தியர்களுக்கு மிராஜ் போர் விமானம் ஒன்றும் புதியதல்ல.
  • இந்த போர் விமானத்தைத் தயாரித்த டிஸஸால்ட் அவியேஷன் நிறுவனமும் இந்தியர்களுக்கு புதிதல்ல.
  • ரஃபேல் ஃபைட்டர் உள்ளிட்ட போர் விமானங்களையும் இந்த நிறுவனமே தயாரித்தது.
  • 1999ம் ஆண்டு கார்கில் போரின் போது, எதிரிகளின் பல பங்குகளை குறிவைத்து துல்லியமாகத் தாக்கிய அழித்த பெருமை மிராஜ்-2000 போர் விமானத்தையே சாரும்.
  • இந்தியாவின் படைப்பலங்களில் மிக பயங்கரத் தாக்குதலுக்கு பெயர் போனதாக மிராஜ் விளங்குகிறது.
  • இந்த போர் விமானம் இந்திய விமானப் படையில் 1985ம் ஆண்டு இணைக்கப்பட்டது.
  • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப்-16 ரக போர் விமானங்களை தனது படையில் இணைத்துக் கொண்டதன் மூலம் பாகிஸ்தான் பலத்தை அதிகரித்த போது, இந்தியா தனது படையில் ஒரே ஒரு விமானி  இயக்கும் 36 மிராஜ் 2000 போர் விமானங்கள் இணைத்துக் கொண்டது.
  • இது 1982ம் ஆண்டு 4 பேர்  அமரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.
  • 2004ம் ஆண்டு மேலும் 10 மிராஜ் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன.
  • அப்போது மொத்தம் 50 மிராஜ் விமானங்கள் இந்திய விமானப் படையில் இருந்தன.
  • சரி.. அதிரடித் தாக்குதலுக்கு மிராஜ் போர் விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்பதை பார்க்கலாம்.
  • அதாவது கில்லர் ஜெட் எனப்படும் மிராஜ் போர் விமானம் ஒரு எஞ்ஜினில் இயக்கப்படும் குறைந்த எடைகொண்ட விமானமாகும்.
  • இது அதிகபட்சமாக மணிக்கு 2,336 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.
  • மேலும், தரையில் இருந்து 59 ஆயிரம் அடி உயரத்தில், 1,550 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தபடிய விமானத்தில் இருந்து குண்டுகளை எறியும் வல்லமை பெற்றது.
  • அது மட்டுமா? லேசர் முறையில் துல்லியமாக இலக்கைக் குறி வைத்து வெடிகுண்டுகளை வீசும் திறனும், விமானத்தில் இருந்து தரைப் பகுதியையும், தரைப் பகுதியில் இருந்து வானத்தில் பறக்கும் இலக்கையும் துல்லியமாக குறி வைத்துத் தாக்கும் வல்லமையும் பெற்றுள்ளது.
  • பிரான்ஸ், எகிப்து, ஐக்கிய அரபு நாடுகள், பிரேசில், தைவான், க்ரீஸ் மற்றும் பெரு ஆகிய நாடுகளும் இந்த வகை போர் விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றன.
  • 2011ம் ஆண்டு ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடட் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மிராஜ் போர் விமானம் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு மிராஜ் 2000-5 எம்கேவாக மாற்றப்பட்டதால் அதன் பணிக்காலம் 2030 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories