TNPSC Thervupettagam

அதிகப்படியான இணையவழி குற்ற வழக்குகள் – பெங்களூரு

May 17 , 2026 15 days 61 0
  • NCRB (தேசிய குற்றப் பதிவகம்) தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் பெங்களூருவில் 17,561 இணையவழி குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன என்பதோடு இது இந்தியாவின் பெருநகரங்களிலேயே மிக அதிகமாகும்.
  • இந்த நகரம் 2024 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 206.6 வழக்குகள் என்ற இணையவழி குற்ற விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
  • இணையவழி குற்றங்களிலேயே மோசடி என்பது மிகப்பெரிய பிரிவாக இருந்தது; பெங்களூருவில் 16,842 மோசடி தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன.
  • கர்நாடகா 2024 ஆம் ஆண்டில் 21,993 இணையவழி குற்ற வழக்குகளைப் பதிவு செய்து, இணையவழி குற்ற பதிவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
  • இந்தியா முழுவதும், இணையவழி குற்ற வழக்குகள் 2023 ஆம் ஆண்டில் 86,420 ஆக இருந்ததிலிருந்து 2024 ஆம் ஆண்டில் 1,01,928 ஆக உயர்ந்து, 17.9% அதிகரிப்பைக் காட்டியுள்ளன.
  • 2024 ஆம் ஆண்டில் இணையவழி குற்ற வழக்குகளில் பெங்களூருவின் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் வீதம் 24.2% ஆக இருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்