வானூர்திகள் உட்பட 3 பில்லியன் டாலருக்கும் (ரூ. 21,000 கோடி) அதிகமான மேம்படுத்தப்பட்ட இராணுவ உபகரணங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
24 எம்ஹெச் - 60 ஆர் கடல் கண்காணிப்பு வானூர்திகள் மற்றும் 6 ஏஎச் - 64இ அப்பாச்சி ரக தாக்குதல் வானூர்திகள் ஆகியவற்றை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.
அப்பாச்சி ஆனது உலகின் மிகவும் மேம்படுத்தப்பட்ட பல பணிகளை மேற்கொள்ளும் கனரக தாக்குதல் திறன் கொண்ட வானூர்தி ஆகும்.
எம்.எச் - 60 ஆர் ஆனது ‘ரோமியோ’ என்றும் குறிப்பிடப் படுகின்றது.