அவசர சிகிச்சைக்கான உரிமை என்பது அரசியலமைப்பின் 21-வது சரத்தின் கீழ் உள்ள 'வாழும் உரிமை'-யின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அனைத்து மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் 112 அவசர உதவி எண்ணைச் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், மூன்று மாதங்களுக்குள் Good Samaritan குறைதீர்க்கும் முறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை பாதிப்புகளுக்கான தேசிய மருத்துவ மீட்பு நெறி முறையை வெளியிட மத்திய அரசுக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், அதனை மூன்று மாதங்களுக்குள் அமல்படுத்துமாறு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டது.
அனைத்து பொது மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களும் AIS-125 தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் 112 உதவி எண்ணுடன் இணைக்கப்பட்ட GPS அடிப்படையிலான கண்காணிப்புடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் அவசர சிகிச்சைப் பதிவேடுகளை உருவாக்கவும், அவற்றை ஒருங்கிணைந்த தேசிய அவசர சிகிச்சைப் பதிவேட்டுடன் இணைக்கவும் உத்தரவிடப்பட்டது.
Good Samaritan பாதுகாப்புச் சட்டங்கள், PM RAHAT பணமில்லா சிகிச்சைத் திட்டம் மற்றும் அவசரக்கால உதவிச் சேவைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.