இது ஆப்கானிஸ்தான் குறித்து இந்தியா நடத்தும் 3வது பிராந்தியப் பாதுகாப்பு உச்சி மாநாடாகும்.
இந்த உச்சி மாநாட்டில் எட்டு நாடுகள் பங்கேற்றன.
அவை இந்தியா, ரஷ்யா, ஈரான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியனவாகும்.
இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் பிரதேசங்களைப் பயங்கர வாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கவோ (அ) பயிற்சியளிக்கவோ (அ) பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கவோ வேண்டி பயன்படுத்த முடியாது என அறிவிக்கப் பட்டது.