இணையவெளி குற்றத்திற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை
October 31 , 2025 21 days 66 0
இணையவெளிக் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கை, இணையவெளிக் குற்றங்களைத் தடுப்பதற்கும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான உலகின் முதல் சட்டப்பூர்வ உலகளாவிய ஒப்பந்தமாகும்.
வியட்நாமின் ஹனோயில் 72 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட இது, மேலும் குறைந்தது 40 ஐ.நா. உறுப்பினர் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட 90 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வந்தது.
அனைத்து கடுமையான குற்றங்களுக்கும் மின்னணு ஆதாரங்களைச் சேகரித்தல், பகிர்தல் மற்றும் பயன்படுத்துவதற்கான முதல் உலகளாவிய கட்டமைப்பை இது நிறுவுகிறது.
இந்த உடன்படிக்கை இணையவெளி சார்ந்த குற்றங்கள், இயங்கலை மோசடி, இயங்கலை வழி குழந்தை பாலியல் துஷ்பிரயோகம், குழந்தைகளைப் பாலியல் உறவிற்கு பயன்படுத்துதல் மற்றும் அந்தரங்க படங்களை ஒருமித்த கருத்து இல்லாமல் பரப்புதல் ஆகியவற்றை குற்றமாக்குகிறது.
இது இணையவெளிக் குற்ற வழக்குகளில் விரைவான சர்வதேச ஒத்துழைப்புக்கான முதல் உலகளாவிய 24/7 ஒத்துழைப்பு வலையமைப்பை உருவாக்குகிறது.
இணையவெளிக் குற்றங்களில் இயங்கலை மோசடி மற்றும் கடத்தல் போன்ற இணையவெளி சார்ந்த குற்றங்களும், போலியான குறுஞ்செய்திகளை அனுப்புதல், அடையாளத் திருட்டு, தீநிரல் மற்றும் பணயத் தீநிரல் போன்ற இணையவெளி சார்ந்த குற்றங்களும் அடங்கும்.