சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகமானது, தேசிய தற்கொலை தடுப்புக் கொள்கையினை வெளியிட்டது.
பொது சுகாதார முன்னுரிமைக் கொள்கையாக தற்கொலைகளைத் தடுப்பதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இத்தகைய முதல் வகையான கொள்கை இது ஆகும்.
வரும் பத்தாண்டுகளில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்வதற்கும் தற்கொலைகளைத் தடுப்பதற்குமான ஒரு செயல்பாட்டுக் களத்தினை இக்கொள்கை நிறுவ உள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள், நாட்டில் தற்கொலை மூலமான இறப்பு வீதத்தினை 10 சதவீதமாகக் குறைப்பதே இக்கொள்கையின் குறிக்கோள் ஆகும்.
உலகளாவிய தற்கொலைப் பதிவுகளில் இந்தியாவில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கையின் பங்களிப்பு தற்போது பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் முறையே 37 சதவீதம் மற்றும் 24.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.