TNPSC Thervupettagam

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவர்

July 23 , 2022 1055 days 1492 0
  • இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • முர்மு இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் (சந்தால்) குடியரசுத் தலைவராக ஆனார்.
  • பிரதிபா பாட்டீல் அவர்களுக்குப் பிறகு இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணி இவரே ஆவார்.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட, பட்டியலினப் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இரண்டாவது நபர் முர்மு ஆவார்.
  • இவர் இந்தியாவின் முதல் பழங்குடிப் பெண் ஆளுநர் ஆவார்.
  • இவர் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒன்பதாவது ஆளுநராகப் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்