இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவர்
July 23 , 2022
1055 days
1492
- இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
- முர்மு இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் (சந்தால்) குடியரசுத் தலைவராக ஆனார்.
- பிரதிபா பாட்டீல் அவர்களுக்குப் பிறகு இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணி இவரே ஆவார்.
- இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட, பட்டியலினப் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இரண்டாவது நபர் முர்மு ஆவார்.
- இவர் இந்தியாவின் முதல் பழங்குடிப் பெண் ஆளுநர் ஆவார்.
- இவர் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒன்பதாவது ஆளுநராகப் பணியாற்றினார்.

Post Views:
1492