இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பானது (DGCI) ”கோவிஷீல்டு” மருந்தினைக் கட்டுப்பாடு கொண்ட ஒரு அவசர காலப் பயன்பாட்டு ஒப்புதலுக்காக பரிந்துரை செய்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பு மருந்தானது இந்தியாவின் சீரம் மருந்து நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனமான ஆஸ்ட்ரா ஜெனேகா ஆகியவற்றினால் இணைந்து தயாரிக்கப் பட்டு உள்ளது.
இந்தியாவில் இந்த மருந்தானது புனேவில் உள்ள சீரம் இந்திய நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டு சந்தைப் படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலாவது தடுப்பு மருந்து இதுவாகும்.
இந்தியாவின் மத்திய மருந்துகள் தரநிர்ணயக் கட்டுப்பாட்டு அமைப்பானது பாரத் பயோடெக்கின் கொரானா வைரஸ் தடுப்பு மருந்தான கோவேக்ஸின் மருந்தின் மீதான அவசர காலப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்காக வேண்டி DGCI அமைப்பிற்குப் பரிந்துரை செய்துள்ளது.
இதன் மூலம் வல்லுநர் குழுவிடமிருந்து சந்தைப்படுத்துதலுக்கான ஒப்புதலைப் பெற்ற இரண்டாவது தடுப்பு மருந்து பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் மருந்து ஆகும்.
இந்த 2 தடுப்பு மருந்துகளும் 2 அளவுகளில் கொடுக்கப்பட வேண்டும், மேலும் இவை 2 முதல் 8oC வெப்ப நிலையில் சேமித்து வைக்கப்பட வேண்டும்.