மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், நிதின் கட்காரி டொயோட்டா கரோலா ஆல்டிஸ் எனும் கலவை எரிபொருள் மின்சார மகிழுந்தினை அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவில் கலவை எரிபொருள் மூலம் இயங்கும் வலுவான கலப்பின மின்சார வாகனம் (FFV-SHEV) தொடர்பான முதல் முன்னோடித் திட்டமாக இது அறிவிக்கப் பட்டு உள்ளது.
இந்தத் திட்டம் எத்தனால் மூலம் இயங்கும் கலவை எரிபொருள் ரக வாகனங்கள் இந்தியச் சூழ்நிலையில் சாத்தியமானதா என்பதை ஆய்வு செய்ய முயல்கிறது.
கலவை எரிபொருள் ரக மகிழுந்துகள் எத்தனால், பெட்ரோல் அல்லது பெட்ரோல் மற்றும் எத்தனாலின் கலவை உள்ளிட்ட நெகிழ்திறன் மிக்க எரிபொருள்களில் இயங்கும் திறன் கொண்டது.
இந்த வாகனங்கள் எந்திரத்தின் எரிபொருளை பெட்ரோலில் இருந்து எத்தனாலுக்கு மாற்றுவதற்கான நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது.
இந்த வாகனங்கள் மின்கலங்கள் மூலம் எந்திரத்தினை இயக்கி, எந்திரத்திலிருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவும்.