TNPSC Thervupettagam

இந்தியாவில் நோய்த் தடுப்பு மருந்தின் மேம்பாடு

May 31 , 2020 1801 days 757 0
  • செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையமானது (CCMB - Centre for Cellular and Molecular Biology) கோவிட் – 19 நோயாளிகளின் மாதிரிகளிலிருந்து கோவிட் – 19 தொற்றின் நிலையான ஒரு முடிவுக் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. 
  • CCMB நச்சுயிரியல் வல்லுநர்கள் பல்வேறு தனித்த வைரஸ்களிலிருந்து தொற்றக் கூடிய வைரஸ்களைப் பிரித்தெடுத்துள்ளனர்.
  • ஆய்வகத்தில் இந்த வைரஸைப் பிரித்தெடுக்கும் திறனானது CCMB நச்சுயிரியல் வல்லுநர்களை கோவிட் – 19 நோயை எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டிய மருந்துச் சோதனை மற்றும் தடுப்பு மருந்து வளர்ச்சி ஆகியவை நோக்கிப் பணியாற்ற அனுமதிக்கும். 
  • அதிக எண்ணிக்கையிலான வைரஸ்கள் பிரித்தெடுக்கப்பட்டு, அவை செயல்படாததாக மாற்றப்பட்டால், அவற்றைச் செயல்படாத வைரஸ் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்த முடியும்.
  • செயல்படாத வைரஸ்கள் உடலினுள் உட்செலுத்தப் பட்டால், மனித நோய் எதிர்ப்புச் சக்தி அமைப்பானது நோய் நுண்மம் தொடர்பான நோய் எதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்