இந்தியாவில் கோவிட் – 19 பரவி வரும் நிலையில், மார்ச் 25 ஆம் தேதியிலிருந்து அடுத்த 21 நாட்களுக்கு இந்தியா முற்றிலும் முடக்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
கொரானா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய அரசு ரூ.15,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியானது நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்பட இருக்கின்றது.
இது 2005 ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தைச் செயல்படுத்துகின்றது.
கோவிட் – 19 ஆனது ஒரு “அறிவிக்கப்பட்ட பேரிடராக” அறிவிக்கப் பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகமானது இந்த முடக்கத்தின் போது தொடர்ந்து செயல்படும் வணிக அமைப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மின் உற்பத்தி அலகுகள், பெட்ரோல் நிலையங்கள், குளிர்ப் பதனக் கிடங்குகள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், உணவு & மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவம் சார் சேவைகள் ஆகியன இதில் அடங்கும்.
மத்திய அரசனாது நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவையும் வேறு சில பகுதிகளில் பிரிவு – 144ஐயும் பல பகுதிகளில் ஒட்டுமொத்த முடக்கத்தையும் அறிவித்துள்ளது.
கூடுவதற்கான அனுமதி சில கட்டுப்பாடுகளோடு நடைமுறையில் இருந்தால் அந்த நடவடிக்கை “முடக்கம்” என்று அழைக்கப் படுகின்றது.
இருப்பினும், இந்தச் சூழ்நிலையில் அத்தியாவசியச் சேவைகள் வழக்கம் போல் கிடைக்கப் பெறும்.
இந்த முடக்கமானது மாவட்ட ஆட்சியர் அல்லது தலைமை மருத்துவ அதிகாரியினால் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது.
பிரிவு 144ன் கீழ், இந்திய தண்டனைச் சட்டத்தின் படி மக்கள் ஒன்று கூடத் தடை செய்யப் பட்டுள்ளது.
பிரிவு 144ன் கீழ், 5ற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூட அனுமதி இல்லை.
அத்தியாவசியச் சேவைகள் முடக்கத்துடன் பிரிவு 144 என்ற உத்தரவும் பிறப்பிக்கப் பட்டால் அதுவே ஊரடங்கு உத்தரவு என்று அழைக்கப் படுகின்றது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரமானது மாவட்ட ஆட்சியரிடமும் காவல்துறை ஆணையரிடமும் உள்ளது.