இரட்டை அடுக்குகள் கொண்ட முதல் சரக்கு ரயிலின் சோதனை ஓட்டமானது மேற்கத்தியப் பிரத்தியேக சரக்குப் போக்குவரத்துப் பாதையில் நடத்தப் பட்டது.
இந்த ரயிலானது இந்தியப் பிரத்தியேக சரக்குப் போக்குவரத்துக் கழக நிறுவனம் என்ற நிறுவனத்தினால் (Dedicated Freight Corporation India Limited - DFCIL) கொடியசைத்துத் துவக்கி வைக்கப் பட்டது.
இந்த ரயிலானது ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள ரேவாரி - மடார் என்ற பிரிவில் இயக்கப்பட உள்ளது.
DFCIL நிறுவனமானது தற்போது ஒரு மணி நேரத்திற்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் சரக்கு ரயில்களை இயக்குகின்றது.
தற்போது இரட்டை அடுக்குகள் கொண்ட ரயில்களானவை சீனா, பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, சுவீடன் மற்றும் நார்வே போன்ற நாடுகளில் மட்டுமே இயக்கப் படுகின்றன.
1,504 கி.மீ. நீளமுள்ள மேற்குப் பெருவழிப் பாதையானது உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியில் தொடங்கி ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் வழியாக நாட்டின் மிகப்பெரிய சரக்குக் கொள்கலன் துறைமுகமான மும்பைக்கு அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகப் பகுதியை இணைக்கின்றது.
இதற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமானது நிதியுதவி அளிக்கின்றது.