TNPSC Thervupettagam

இறந்த மகள்களுக்கான சொத்துரிமை

July 31 , 2026 2 days 63 0
  • 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு முன் இறந்த இந்து மகள்களுக்கு பூர்வீகச் சொத்தில் சமமான பங்காளர் உரிமை கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • இந்து வாரிசுரிமை (திருத்தம்) சட்டம், 2005 நடைமுறைக்கு வந்த தேதியான 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 அன்று இந்து மகள்கள் உயிருடன் இருந்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு சமமான சொத்துரிமை கிடைக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு முன் இறந்த மகளின் சட்டபூர்வமான வாரிசுகள் அச்சொத்துரிமையைக் கோர முடியாது; ஏனெனில் இறந்த மகள் அந்த உரிமையைப் பெற்றிருக்கவில்லை.
  • மகளின் பிறந்த தேதி முக்கியமல்ல என்றும், திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட தேதியில் அவர் உயிருடன் இருந்தாரா என்பது மட்டுமே முக்கியம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
  • 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 அன்று உயிருடன் இருந்த மகள்களுக்கு பூர்வீகச் சொத்தில் மகன்களுக்கு இணையான உரிமைகள் உண்டு.
  • குடும்ப சொத்துப் பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்