உலகப் பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீடு 2021
April 22 , 2021
1518 days
665
- எல்லைகளைக் கடந்த நிருபர்கள் எனும் ஒரு இலாப நோக்கமில்லா அமைப்பானது சமீபத்தில் இக்குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
- இந்த அமைப்பு 180 நாடுகளை இதில் தரவரிசைப் படுத்தியுள்ளது.
- இக்குறியீட்டில் இந்தியா 142வது இடத்தில் உள்ளது.
- 2020 ஆம் ஆண்டிலும் இந்தியா இதே இடத்தில் தான் இருந்தது.
- நார்வே முதலிடத்திலும் அதனையடுத்து பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் இதில் உள்ளன.
- 2020 ஆம் ஆண்டிலும் நார்வே முதலிடம் பிடித்திருந்தது.
- இக்குறியீட்டின் கடைசி இடத்தில் எரித்ரியா (Eritrea) உள்ளது.
- 180 நாடுகளில் சீனா 177வது இடத்தில் உள்ளது.
- இதில் வடகொரியா 179வது இடத்திலும் துர்க்மெனிஸ்தான் 178வது இடத்திலும் உள்ளன.
- இந்த அறிக்கையானது பிரேசில், ரஷ்யா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுடன் “மோசமான நாடுகள்” (“BAD” category) என்ற பிரிவில் இந்தியாவையும் வகைப்படுத்தி உள்ளது.
- இந்தியாவைப் பத்திரிக்கையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளுள் ஒன்று என இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Post Views:
665