புதுடெல்லி மற்றும் லடாக் நகரங்களை இந்திய-சீன எல்லைப்பகுதி வழியாக செல்லக்கூடிய ஒரு ரயில்பாதையின் வழியாக இணைக்கும் திட்டத்தை இந்தியன் இரயில்வே அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் இயக்கப்படும்போது பிலாஸ்பூர்- மணாலி- லே பாதையானது உலகின் மிக உயர்ந்த ரயில் பாதையாக இருக்கும்.
சீனாவின் குவான்காய்-திபெத் ரயில்பாதையின் 2000 மீட்டர் உயர அளவை ஒப்பிடுகையில் இது கடல் மட்டத்திலிருந்து 5360 மீட்டர் உயரத்தில் அமையவுள்ளது.
இத்திட்டம் முடிவடைந்த பின்பு, டெல்லி முதல் லே வரையிலான 40 மணிநேர பயணநேரமானது 20 மணி நேரமாக குறையும்.
குறிப்பு
இப்பாதையில் 3000 மீட்டர் உயரத்தில் இந்தியாவில் முதலாவதாக சுரங்கப் பாதையினுள் கெய்லாங் இரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது.