TNPSC Thervupettagam

உள்ளார்ந்த டிஜிட்டல் முறையை கொண்ட பாரதம்

May 14 , 2021 1521 days 1159 0
  • நிதி ஆயோக் மற்றும் மாஸ்டர்கார்டு ஆகியவை இணைந்து ஒன்றிணைக்கப்பட்ட வர்த்தகம்: உள்ளார்ந்த டிஜிட்டல் முறையை கொண்ட ஒரு பாரதத்தை உருவாக்கச் செய்வதற்கான செயல்திட்டத்தை உருவாக்குதல்” (Connected Commerce: Creating a Roadmap for a Digitally Inclusive Bharat) என்று தலைப்பிடப்பட்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளன.
  • இந்தியாவில் டிஜிட்டல் நிதி உள்ளடக்கத்தினை விரைவுபடுத்தச் செய்வதிலுள்ள சவால்களை இந்த அறிக்கையானது  அடையாளம் காண்கிறது.
  • நாட்டின் 1.3 பில்லியன் குடிமக்களும் டிஜிட்டல் சேவையைப் பெறச் செய்வதற்கான பரிந்துரைகளையும் இந்த அறிக்கை வழங்குகிறது.

முக்கியப் பரிந்துரைகள்

  • வங்கியல்லாத நிதியியல் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கான செயல்பாட்டுத் தளங்களை வலுப்படுத்துவதற்காக பண வழங்கீட்டு  கட்டமைப்பு முறைகளை வலுப்படுத்துதல்.
  • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பதிவு முறை மற்றும் குறைதீர்ப்பு முறையை டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் அவற்றிற்கான கடன் மூலங்களை பரவலாக்கல்.
  • தகவல் பரிமாற்றுமுறைகளை உருவாக்குதல் மற்றும் நுகர்வோரிடையே மோசடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான எச்சரிக்கைகளை இணையதள டிஜிட்டல் வர்த்தக தளங்கள் கொண்டுள்ளனவா என்பதை உறுதி செய்தல்.
  • வேளாண்மைக்கான வங்கியல்லாத நிதியியல் நிறுவனங்களை குறைந்த செலவிலான மூலதனத்தினை பெறச் செய்தல் மற்றும் டிஜிட்டல் முறையின் மூலம் நீண்ட காலம் பயனடைவதற்காக “Phygital” (Physical + digital) என்ற மாதிரியைப் பயன்படுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்