தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் ஆனது சேவா பாரதி மற்றும் யுவ விகாஸ் சமூக அமைப்புடன் இணைந்து கிராமீன் உத்யாமி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைச் சமீபத்தில் தொடங்கியது.
இது பழங்குடியின இளைஞர்களிடையே திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு குறித்து ஊக்குவிப்பது மற்றும் திறன் இந்தியா என்ற திட்டத்தினை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பயிற்சியின் முதல் கட்டத்தில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பகுதிகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் சேர்க்கப் பட்டனர்.
தற்போது, இந்த திட்டம் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் செயல்படுத்தப் படுகிறது.