குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான குழு
July 24 , 2022
1057 days
479
- மத்திய அரசானது “குறைந்தபட்ச ஆதரவு விலை மீதான குழுவை” நிர்ணயித்துள்ளது.
- குறைந்தபட்ச ஆதரவு விலையினை மேலும் பயனுள்ளதாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் மேம்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டு இந்தக் குழுவானது அமைக்கப் பட்டுள்ளது.
- இக்குழுவின் தலைவராக சஞ்சய் அகர்வால் செயல்படுவார்.
- "வேளாண் செலவினங்கள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்திற்கு" அதிக சுயாட்சி அதிகாரங்களை வழங்குவதற்கானப் பரிந்துரைகளை இந்தக் குழு வழங்கும்.
- இக்குழுவின் மற்ற உறுப்பினர்கள்
- ரமேஷ் சந்த்- நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்
- சுக்பால் சிங் - அகமதாபாத் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்
- திலிப் சங்கனி - இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு அமைப்பின் தலைவர்
- உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் செயலாளர்
- கூட்டுறவு மற்றும் ஜவுளித்துறை செயலாளர்
- வேளாண் துறை செயலாளர்
- இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் துறை செயலாளர்
- கர்நாடகா, சிக்கிம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநில அரசுகளின் பிரதிநிதிகள்.
Post Views:
479