ஜவஹர்லால் நேரு துறைமுகம் ஆனது, அனைத்து கப்பல் நிறுத்தத் துறைகளும் பொது தனியார் கூட்டாண்மை மாதிரியில் இயக்கப்படுகின்ற இந்தியாவின் முதல் முழு அளவிலான நில உரிமையாளர் (லாண்ட்லார்ட்) மாதிரியினைக் கொண்ட முக்கியத் துறைமுகமாக மாறியுள்ளது.
இந்தியத் துறைமுகங்களில் அரசு-தனியார் கூட்டாண்மை மாதிரி மூலம் மேற் கொள்ளப் படும் முதலீடானது, கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
லாயிட்ஸ் நிறுவனம் மேற்கொண்ட 2021 ஆம் ஆண்டின் முன்னணி 100 துறைமுகங்கள் பட்டியலில் நாட்டின் முன்னணி கொள்கலன் துறைமுகங்களில் ஒன்றாக இது குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும் இது சிறந்த 100 உலகளாவிய துறைமுகங்களின் பட்டியலில் 26வது இடத்தில் உள்ளது.