தமிழ்நாடு மாநிலமானது 2025 முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான இரண்டு ஆண்டு கால தொலை அளவியல் ஆய்வை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் கடற்கரையோரத்தில், செயற்கைக்கோள் மற்றும் ஃபிளிப்பர் டேக்கிங் எனும் குறியிடல் முறையைப் பயன்படுத்தி, ஆலிவ் ரெட்லே ஆமைகளின் இயக்கங்களைக் கண்காணிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கரையோரப் பகுதிகளில் அவை அதிகம் காணப்படும் இடங்கள், அவற்றின் இடம் பெயர்வுப் பாதைகள் மற்றும் அவை அதிக எண்ணிக்கையில் வலையில் சிக்கிக் கொள்ளும் வகையிலான மீன்பிடி மேற்கொள்ளப்படும் பகுதிகளை அடையாளம் காண்பதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மீன்பிடித்தல் தொடர்பான உயிரிழப்பைக் குறைப்பதற்கான அறிவியல் ஆதரவு உத்திகளை இந்த ஆய்வின் முடிவுகள் வழங்கும்.