அமெரிக்கக் கடற்படை சமீபத்தில் லட்சத்தீவு அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுதந்திரக் கடல் போக்குவரத்து என்ற ஒரு நடவடிக்கையை நடத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, அமெரிக்க போர்க் கப்பலானது இந்தியாவின் முன் ஒப்புதல் பெறாமல் இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் நுழைந்தது.
ஐக்கிய நாடுகளின் கடல் சட்டத்தின் கருத்துப்படி, கப்பல்கள் தமது பிரத்தியேக பொருளாதார மண்டலத்தைப் பயன்படுத்துவதை அந்த நாடுகளால் தடுக்க முடியாது.
இருப்பினும், இந்தியச் சட்டங்களின்படி, எந்தவொரு வெளிநாட்டு இராணுவமும் இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் செய்வதற்கு முன்னர் தெரிவிக்க வேண்டும்.
வளரும் நாடான இந்தியா, அதன் EEZ மண்டலத்தை இன்னும் முழுமையாக ஆராய வேண்டும்.