அமெரிக்க கருவூலமானது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு அறிக்கையின் இந்த ஏப்ரல் பதிப்பானது பிடென் நிர்வாகத்திலிருந்து வெளியிடப்படும் முதல் அறிக்கையாகும்.
இது அமெரிக்காவின் 20 மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளின் நாணய நடைமுறைகளை மதிப்பாய்வு செய்கிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, வேண்டுமென்றே பணமதிப்பைக் குறைப்பது என்பது ஒரு நாட்டின் நாணயத்திற்கும் அமெரிக்க டாலருக்கும் இடையிலான மாற்று விகிதத்தைப் பாதிக்கிறது.
இது சர்வதேச வர்த்தகத்தில் நியாயமற்ற முறையில் நன்மைகளைப் பெற்றிட வேண்டி செய்யப் படுகிறது.
அவர்களின் நாணய நடைமுறைகள் தொடர்பாக வெளியிடப்படும் ‘கண்காணிப்புப் பட்டியலில்’ (Monitoring List) உள்ள 11 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உபரி 2020 ஆம் ஆண்டில் 24 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
இந்தியாவையும் சேர்த்து இந்தப் பட்டியலில் உள்ள மற்ற 10 நாடுகள் சீனா, ஜப்பான், கொரியா, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் மெக்சிகோ ஆகியனவாகும்.
இந்த முறை, சீனாவை அந்தப் பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கியுள்ளது.
இருப்பினும், தைவான் கண்காணிப்புப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.