TNPSC Thervupettagam

சுதந்திரக் கடல் போக்குவரத்து

April 20 , 2021 1520 days 668 0
  • அமெரிக்கக் கடற்படை சமீபத்தில் லட்சத்தீவு அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுதந்திரக் கடல் போக்குவரத்து என்ற ஒரு நடவடிக்கையை நடத்தியுள்ளது.
  • இந்த நடவடிக்கையின் போது, அமெரிக்க போர்க் கப்பலானது இந்தியாவின் முன் ஒப்புதல் பெறாமல் இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் நுழைந்தது.
  • ஐக்கிய நாடுகளின் கடல் சட்டத்தின் கருத்துப்படி, கப்பல்கள் தமது பிரத்தியேக பொருளாதார மண்டலத்தைப் பயன்படுத்துவதை அந்த நாடுகளால் தடுக்க முடியாது.
  • இருப்பினும், இந்தியச் சட்டங்களின்படி, எந்தவொரு வெளிநாட்டு இராணுவமும் இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் செய்வதற்கு முன்னர் தெரிவிக்க வேண்டும்.
  • வளரும் நாடான இந்தியா, அதன் EEZ மண்டலத்தை இன்னும் முழுமையாக ஆராய வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்