சாலை விபத்து மரணங்களைக் குறைக்க தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு ₹500 கோடி செலவில் முதலமைச்சரின் சாலைப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கும்.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு பதிவாகியுள்ளது.
அதிவேகம் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிய மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தானியங்கி வாகன எண் பலகை கண்டறிதல் (ANPR)கேமராக்கள் பொருத்தப்படும்.
வழித்தட விபத்து மீட்பு மற்றும் அவசரச் சேவைத் திட்டத்தின்கீழ், 25 அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அவசர கால உதவி மையங்களாக மேம்படுத்தப்படும்.
25 விபத்துப் பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, இந்த மருத்துவ வசதிகளுடன் இணைக்கப் படும்.