தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் சமூகப் புள்ளியியல் பிரிவானது, இந்தியாவில் உள்ள திருமணமாகாத நபர்களின் எண்ணிக்கை விகிதம் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டது.
நாட்டில் திருமணமாகாத இளைஞர்களின் சதவீதம் ஆனது அதிகரித்து வருகிறது.
இந்த எண்ணிக்கையானது பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவர் மத்தியிலும் அதிகரித்து வருகிறது.
ஆண்களில் 15 முதல் 29 வயது வரையிலான திருமணமாகாத இளைஞர்களின் சதவீதம் ஆனது 2019 ஆம் ஆண்டில் 26.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது 2011 ஆம் ஆண்டில் 20.8 சதவீதமாக இருந்தது.
2019 ஆம் ஆண்டில், ஜம்மு & காஷ்மீரில் உள்ள திருமணம் செய்து கொள்ளாத இளைஞர்களின் எண்ணிக்கையானது அதிக சதவிகிதத்தில் பதிவானது.
அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைந்த சதவீதமே பதிவானது.