மத்தியத் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இணைந்து, கோரக்பூரில் அமைக்கப் பட்டுள்ள தூர்தர்சன் கேந்த்ரா புவி நிலையத்தினைத் திறந்து வைத்தனர்.
இது உத்தரப் பிரதேசத்திலுள்ள 2வது தூர்தர்சன் கேந்தரா புவி நிலையமாக விளங்கும்.
இந்த நிகழ்வின்போது அகில இந்திய வானொலியின் 3 FM நிலையங்களும் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டன.
அகில இந்திய வானொலியின் 3 FM நிலையங்கள் எட்டாவாஹ், லகிம்பூர் கேரி மற்றும் பஹரைக் ஆகிய மாவட்டங்களில் திறந்து வைக்கப்பட்டன.