தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31வது தென்னக மண்டலக் குழுவின் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.
இந்தக் குழுவில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய ஒன்றியப் பிரதேசங்களும் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசு மற்றும் தென்னக மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு தேவைப்படும் பிரச்சனைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.
மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956-இன் பிரிவுகள் 15 முதல் 22 வரை தென்னக மண்டலக் குழு உருவாக்கப்பட்டு மத்திய-மாநில மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான விவாதங்களுக்கான மன்றமாகச் செயல்படுகிறது.
இது பிராந்தியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும், கூட்டுறவை மேம்படுத்துவதற்குமான ஓர் ஆலோசனை அமைப்பாகச் செயல்படுகிறது.