புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், தேசத்தைக் கட்டியெழுப்பிய பங்களிப்பிற்காக 15 பேருக்கு 'தேசிய அனுபவ் விருதுகள் 2026' வழங்கப்பட்டது.
பாஸ்போர்ட்/கடவுச்சீட்டு சேவா கேந்திராக்கள், விதி சீர்திருத்தங்கள், தொழில்நுட்ப தழுவல் மற்றும் அரசு கணக்குகள் உள்ளிட்ட திட்டங்களில் விருது பெற்றவர்கள் பங்காற்றியுள்ளனர்.
மத்திய அரசுப் பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள், 12 பொதுத்துறை வங்கிகள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள 'அனுபவ்' தளம் வழிவகை செய்கிறது.
'பென்ஷன் மித்ரா' கையேடு மற்றும் 5-வது தேசிய அளவிலான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் இயக்கத்திற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன.
ஓய்வூதிய நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கும் குடும்ப ஓய்வூதிய விதிகளை வலுப்படுத்துவதற்குமான சீர்திருத்தங்களை அரசு சுட்டிக் காட்டியது.