TNPSC Thervupettagam

நகர நிர்வாகம் குறித்த நிதி ஆயோக் அறிக்கை

May 2 , 2026 15 hrs 0 min 47 0
  • நிதி ஆயோக் "Moving Towards Effective City Government: A Framework for Million-Plus Cities" என்ற அறிக்கையை வெளியிட்டது.
  • இந்தியாவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 47 நகரங்கள் உள்ளன, இவை நகர்ப்புற மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) சுமார் 60% பங்களிக்கின்றன.
  • இந்த நகரங்கள் 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் உள்ள பலவீனமான அதிகாரங்கள், போதிய நிதியின்மை, பலவீனமான சேவைகள் மற்றும் தெளிவான தலைமையின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.
  • நகர அரசாங்கங்கள் சில செயல்பாடுகள் மீது மட்டுமே கட்டுப்பாட்டைக் கொண்டு உள்ளன மற்றும் நிதிக்காக மாநில அரசாங்கங்களை பெரிதும் நம்பியுள்ளன.
  • நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள், சேவைகளின் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் மாநில நிதிக் குழுக்கள் (SFCs) மூலம் வலுவான நகராட்சி நிதியாதாரம் ஆகியவற்றை இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
  • மேலும் இது நகர்ப்புற ஆளுகை மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தெளிவான பொறுப்புகளைப் பரிந்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்