ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் Global Network Against Food Crises எனும் அமைப்பால் 10-வது உலகளாவிய உணவு நெருக்கடிகள் அறிக்கை (GRFC) வெளியிடப்பட்டது.
2025 ஆம் ஆண்டில், 47 நாடுகளில் உள்ள 266 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர், இது அவர்களின் மக்கள்தொகையில் 22.9% ஆகும் மற்றும் 2024-ஆம் ஆண்டினை விட அதிகமாகும்.
ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாட்டின் (IPC) 5-வது கட்டத்தின் கீழ், 6 பிராந்தியங்களில் சுமார் 1.4 மில்லியன் மக்கள் பேரழிவு நிலையில் இருந்தனர், இது 2016-ஆம் ஆண்டில் இருந்து ஏற்பட்ட கடுமையான உயர்வாகும்.
32 நாடுகளில் 39 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அவசர நிலையில் (IPC கட்டம் 4) இருந்தனர், அதே நேரத்தில் காசா மற்றும் சூடானில் பஞ்சம் (IPC கட்டம் 5) ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மோதல்கள், தீவிர வானிலை மற்றும் பொருளாதார அதிர்ச்சிகள் ஆகியவை இதன் முக்கிய காரணங்களாகும், மேலும் பாதிக்கப்பட்ட மக்களில் 80%-க்கும் அதிகமானோர் நீண்டகால நெருக்கடி பகுதிகளில் வாழ்கின்றனர்.
சுமார் 35.5 மில்லியன் குழந்தைகளும் 9.2 மில்லியன் பெண்களும் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொண்ட, அதேவேளையில் உணவு ஆதரவிற்கான நிதியுதவி 2016–17 ஆம் ஆண்டளவுகளுக்குக் குறைந்துள்ளது.