நிதி ஆயோக் "Moving Towards Effective City Government: A Framework for Million-Plus Cities" என்ற அறிக்கையை வெளியிட்டது.
இந்தியாவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 47 நகரங்கள் உள்ளன, இவை நகர்ப்புற மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) சுமார் 60% பங்களிக்கின்றன.
இந்த நகரங்கள் 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் உள்ள பலவீனமான அதிகாரங்கள், போதிய நிதியின்மை, பலவீனமான சேவைகள் மற்றும் தெளிவான தலைமையின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.
நகர அரசாங்கங்கள் சில செயல்பாடுகள் மீது மட்டுமே கட்டுப்பாட்டைக் கொண்டு உள்ளன மற்றும் நிதிக்காக மாநில அரசாங்கங்களை பெரிதும் நம்பியுள்ளன.
நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள், சேவைகளின் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் மாநில நிதிக் குழுக்கள் (SFCs) மூலம் வலுவான நகராட்சி நிதியாதாரம் ஆகியவற்றை இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
மேலும் இது நகர்ப்புற ஆளுகை மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தெளிவான பொறுப்புகளைப் பரிந்துரைக்கிறது.