TNPSC Thervupettagam

நிர்மல் டாட் அபியான் - கடற்கரைத் தூய்மை இயக்கம்

November 13 , 2019 2094 days 774 0
  • மத்திய சுற்றுச் சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது (Ministry of Environment, Forest and Climate Change - MoEFCC) நிர்மல் டாட் அபியான் என்ற ஒரு தூய்மை இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது கடற்கரைகளில் தூய்மையை (துப்புரவு) மேம்படுத்துவதையும் கடலோர சுற்றுச் சூழல் அமைப்புகளின் முக்கியத்துவம் குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • தேசிய பசுமைப் படையுடன் (National Green Corps - NGC) இணைந்து நாடு முழுவதும் உள்ள 10 கடலோர மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 50 கடற்கரைகளில் ஒரு மிகப் பெரிய அளவில் தூய்மை இயக்கமானது செயல்படுத்தப் பட்டது.
  • தேசிய பசுமைப் படை என்பது NGC சுற்றுச்சூழல் பள்ளி மன்றங்களுடன் இந்தியாவில் உள்ள சுமார் 1,20,000 பள்ளிகளை உள்ளடக்கிய MoEFCCன் ஒரு திட்டமாகும்.
  • இந்தியாவில் உள்ள பள்ளிகளில் சுற்றுச்சூழல் செயல்பாடானது NGC மூலம் ஊக்குவிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்