ஒளிச் சீரமைப்பு எனப்படும் செயல்முறையின் மூலம் சூரிய ஒளியைப் பயன்படுத்தி நெகிழிக் கழிவுகளை ஹைட்ரஜன் எரிபொருளாக மாற்றுவதற்கான புதிய முறைகளை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஒளிச் சீரமைப்பு என்பது ஒரு ஒளிவினையூக்கி செயல்முறையாகும், இதில் சூரிய ஒளி மற்றும் வினையூக்கிகள் நெகிழிகளை சிதைத்து ஹைட்ரஜன் மற்றும் தொழில்துறை இரசாயனங்களை உருவாக்குகின்றன.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நெகிழிக் கழிவுகள், சூரிய ஆற்றல் மற்றும் பாதுகாப்பான வினையூக்கிகளைப் பயன்படுத்தி தூய்மையான எரிபொருள் உற்பத்திக்கான அமைப்புகளை உருவாக்கியுள்ளனர்.
இந்த செயல்முறையானது பாலிஎதிலீன் மற்றும் பாலிப்ரோப்பிலீன் போன்ற நெகிழிகளை ஹைட்ரஜன், தொகுப்பு வாயு, அசிட்டிக் அமிலம் மற்றும் திரவ எரிபொருட்களாக மாற்றும் திறன் கொண்டது.
ஹைட்ரஜன் என்பது சுத்திகரிப்பு மற்றும் அம்மோனியா உற்பத்தி போன்ற தொழில்களில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான தூய்மையான எரிபொருளாகும்.
உலகளாவிய நெகிழி உற்பத்தி ஆண்டுதோறும் 400 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக உள்ளது, ஆனால் 10% முதல் 18%-க்கும் குறைவான நெகிழிக் கழிவுகளே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.