- பஞ்சாபில், பருத்தி சாகுபடியில் சுமார் 20% அதிகரிப்பு பதிவானதன் மூலம் பயிர்களின் பல்வகைப்படுத்தல் முயற்சிகள் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளன.
- கடந்த ஆண்டு சுமார் 2.49 லட்சம் ஏக்கர்களாக இருந்த பருத்தி சாகுபடியின் மொத்தப் பரப்பளவானது 2025 ஆம் ஆண்டில் 2.98 லட்சம் ஏக்கர்களாக அதிகரித்துள்ளது.
- இது ஓராண்டிற்குள் 49,000 ஏக்கருக்கும் அதிகமான அதிகரிப்பைக் காட்டுகிறது.
- இந்த மாநிலத்தில் பருத்தி சாகுபடியில் முன்னணியில் உள்ள நான்கு மாவட்டங்கள் முறையே ஃபாசில்கா, மான்சா, பதிண்டா மற்றும் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் ஆகும்.
- பஞ்சாப் மாநில அரசானது விவசாயிகளுக்கு பருத்தி விதைகளை வாங்க சுமார் 33% என்ற அளவிற்கு மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.

Post Views:
61