ஈரானின் ஃபட்டா-1 எறிகணை தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் தனது புதிய வான்வழி பாதுகாப்பு அமைப்பான 'பராக் மேகன்' அல்லது 'Lightning Shield-மின்னல் கவசத்தை' முதன்முறையாக செயல்படுத்தியது.
இது பராக் MX எறிகணை பாதுகாப்பு அமைப்பின் சிறப்பு வடிவமாகும்.
இது ஆளில்லா விமானங்கள், கப்பல் எறிகணைகள் மற்றும் உந்துவிசை எறிகணைகள் போன்ற பல்வேறு வான்வழியான அச்சுறுத்தல்களிலிருந்து கடற்படைக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு ஆனது, சார் 6 வழித் துணைக் கப்பல்கள் எனப்படும் மேம்படுத்தப் பட்ட இஸ்ரேலியக் கடற்படை கப்பல்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஃபட்டா-1 என்பது ஒரு நடுத்தரத் தூர தாக்குதல் வரம்புடைய அதி மீயொலி உந்துவிசை எறிகணையாகும்.
இஸ்ரேலின் இரும்பு கவசம் மற்றும் ஆரோ போன்ற மிகவும் சிறந்தப் பாதுகாப்பு அமைப்புகளையும் தாண்டி தாக்குவதற்காக வேண்டி இது மிகவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு ள்ளது.
இந்த எறிகணையானது, மேக் 13 மற்றும் 15 ஆகிய வரம்பிற்கு இடையில் சுமார் 15,000 கிமீ/மணி வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
இது தோராயமாக 1,400 கிலோமீட்டர் (சுமார் 870 மைல்கள்) வரையிலான தாக்குதல் வரம்பைக் கொண்டுள்ளது.