இந்திய அரசு சமீபத்தில் பல்துறை கண்காணிப்பு முகமையைக் கலைத்தது.
இது முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையை விசாரிப்பதற்காக அமைக்கப் பட்டது.
மத்தியப் புலனாய்வுப் பிரிவின் கீழ் இரண்டு ஆண்டு காலப் பணிக் காலத்திற்கு 1998 ஆம் ஆண்டில் இந்த பல்துறை கண்காணிப்பு முகமை அமைக்கப்பட்டது.
இது MC ஜெயின் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
24 ஆண்டுகளுக்கும் மேலான அதன் செயல்பாட்டிற்குப் பிறகும், இந்த முகமை அந்த சதித் திட்டம் பற்றி எந்தத் திடுக்கிடும் புதிய கண்டுபிடிப்புகளையும் பதிவு செய்ய வில்லை.