பிரதமர் அவர்கள் நீர்மப் பெட்ரோலிய வாயு (LPG)இறக்குமதி முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இது 348 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தோப்கி-துர்காபூர் இயற்கை வாயு குழாய்த் தொடர் பிரிவாகும்.
இது பிரதான் மந்திரி உர்ஜா கங்கைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மொத்தமாக 2540 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தக் குழாய்த் தொடரானது உத்தரப் பிரதேசம் முதல் ஒடிசா வரை கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
தற்பொழுது இந்தத் திட்டத்தில் மேற்கு வங்க மாநிலமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இது அடுத்த 2 ஆண்டில் வாரணாசியில் உள்ள குடும்பங்களுக்கும் அதற்கு அடுத்த ஆண்டில் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் (மாநிலங்களில்) வாழும் லட்சக் கணக்கான குடும்பங்களுக்கும் குழாய் வழியிலான சமையல் எரிவாயுவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொலைவு வாரியான பகிர்வு
உத்தரப் பிரதேசமானது 338 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எரிவாயுக் குழாய்த் தொடரைப் பெறுகின்றது.
பீகார் மாநிலமானது 441 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எரிவாயுக் குழாய்த் தொடரைப் பெறுகின்றது.
ஜார்க்கண்ட் ஆனது 500 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எரிவாயுக் குழாய்த் தொடரைப் பெறுகின்றது.
மேற்கு வங்க மாநிலமானது 542 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எரிவாயுக் குழாய்த் தொடரைப் பெற உள்ளது.
ஒடிசா மாநிலமானது 718 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குழாய்த் தொடரின் மூலம் பயன் பெறுகின்றது.