TNPSC Thervupettagam

புள்ளி விவரங்களுக்கான நிலைக்குழு

December 31 , 2019 1998 days 874 0
  • மத்தியப் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்குதல் துறை அமைச்சகமானது புள்ளி விவரங்களுக்கான நிலைக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • இந்தக் குழுவின் நோக்கம் அரசாங்கத்தின் தரவை மேம்படுத்துவதாகும்.
  • இந்த அனைத்து தரவுத் தரங்களை மாற்றியமைத்த பின்னர் 2020 - 21ல் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று இந்த அமைச்சகம் அப்போது அறிவித்திருந்தது.

இக்குழு பற்றி

  • இந்தக் குழுவானது முன்னாள் தலைமைப் புள்ளி விவர நிபுணரான புரோனாப் சென் என்பவரால் தலைமை தாங்கப் படுகின்றது.
  • இந்தக் குழுவானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதியன்று சந்திக்க இருக்கின்றது.
  • இக்குழுவில் சுமார் 28 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • மேலும், இந்தக் குழுவானது நான்கு நிலைக் குழுக்களை உள்ளடக்கியுள்ளது. அவையாவன:
    • தொழிலாளர் சக்தி புள்ளி விவரங்கள்,
    • தொழில்துறை புள்ளி விவரங்கள்,
    • சேவைகள் துறை,
    • முறைப்படுத்தப் படாத துறைசார் நிறுவனங்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்