மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று புது தில்லியில் ஸ்வச் சர்வேக்சன் குழுமத் தர வரிசையை வெளியிட்டுள்ளது.
இது ஒரு தூய்மைக் கணக்கெடுப்பு ஆகும். இது போட்டிமிக்க கூட்டாட்சிக்கு உதவுகின்றது.
10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பிரிவில், இந்தூர் நகரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தூர் நகரம் இந்தக் குறியீட்டில் முதல் இடத்தில் உள்ளது (2017, 2018, 2019).
இதில் இந்தூரைத் தொடர்ந்து, போபால் மற்றும் சூரத் ஆகிய நகரங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
ஒரு லட்சத்துக்கும் 10 லட்சத்துக்கும் இடையிலான மக்கள் தொகை கொண்ட பிரிவில், ஜாம்ஷெட்பூர் நகரம் முதலாவது இடத்திலும் புது தில்லி இரண்டாவது இடத்திலும் கார்கோன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.