புள்ளி விவரங்களுக்கான நிலைக்குழு
December 31 , 2019
1998 days
873
- மத்தியப் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்குதல் துறை அமைச்சகமானது புள்ளி விவரங்களுக்கான நிலைக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
- இந்தக் குழுவின் நோக்கம் அரசாங்கத்தின் தரவை மேம்படுத்துவதாகும்.
- இந்த அனைத்து தரவுத் தரங்களை மாற்றியமைத்த பின்னர் 2020 - 21ல் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று இந்த அமைச்சகம் அப்போது அறிவித்திருந்தது.
இக்குழு பற்றி
- இந்தக் குழுவானது முன்னாள் தலைமைப் புள்ளி விவர நிபுணரான புரோனாப் சென் என்பவரால் தலைமை தாங்கப் படுகின்றது.
- இந்தக் குழுவானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதியன்று சந்திக்க இருக்கின்றது.
- இக்குழுவில் சுமார் 28 உறுப்பினர்கள் உள்ளனர்.
- மேலும், இந்தக் குழுவானது நான்கு நிலைக் குழுக்களை உள்ளடக்கியுள்ளது. அவையாவன:
- தொழிலாளர் சக்தி புள்ளி விவரங்கள்,
- தொழில்துறை புள்ளி விவரங்கள்,
- சேவைகள் துறை,
- முறைப்படுத்தப் படாத துறைசார் நிறுவனங்கள்.
Post Views:
873