January 12 , 2026
9 hrs 0 min
23
- மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், 2025 ஆம் ஆண்டுக்கான பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதாவின் வரைவை வெளியிட்டுள்ளது.
- இந்த மசோதா, 1968 ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லி சட்டத்திற்குப் பதிலாக அமலுக்கு வரும்.
- இது இந்தியாவில் பூச்சிக்கொல்லிகளின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, சேமிப்பு, பரிமாற்றம் மற்றும் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும்.
- பூச்சிக்கொல்லிகளுக்கு அளிக்கப்படும் ஒப்புதலைக் கட்டுப்படுத்த ஒரு மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் ஒரு பதிவுக் குழுவை இந்த மசோதா வழங்குகிறது.
- இது பூச்சிக்கொல்லிகளின் உரிமம், அடையாளக் குறிப்பிடல் மற்றும் டிஜிட்டல் பதிவு ஆகியவற்றை கட்டாயமாக்குகிறது.
- இதில் பூச்சிக்கொல்லிகளைப் பாதுகாப்பற்ற அல்லது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவதற்கான தண்டனைகளும் அடங்கும்.
Post Views:
23