இந்திய இராணுவமானது, பைரவ் என்ற புதிய நவீனப் போர் படையை உருவாக்கி உள்ளது.
கண்காணிப்பு, உளவு பார்த்தல் மற்றும் துல்லியமான தாக்குதல்களுக்காக இந்தப் படையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டப் பயிற்சி பெற்ற ஆளில்லா விமான செயல்பாட்டாளர்கள் உள்ளனர்.
இதில் எல்லைகளில் 25 படைப்பிரிவுகளாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், 15 படைப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பைரவ் உத்தி சார் மற்றும் செயல்பாட்டுப் பணிகளுக்காக துணை சிறப்புப் படைகள் (SF) மற்றும் வழக்கமான காலாட்படைக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது.
தெற்கு படைப்பிரிவின் கீழ் ஒரு படைப்பிரிவு ஆனது பாலைவனப் பகுதியில், முக்கியமாக இராஜஸ்தானைச் சேர்ந்த படைப்பிரிவுகளுடன் நிலை நிறுத்தப் பட்டு உள்ளது.
இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதியன்று நடைபெறும் இந்திய இராணுவ தின அணிவகுப்பில் இந்த படைப் பிரிவுகள் பொது மக்கள் முன் அணிவகுப்பு மேற்கொள்ளும்.