நமது மாநிலத்தில் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நிலையான விவசாயத்தை ஆதரிக்கவும் ஒரு உத்திசார் திட்ட வரைவைத் தமிழ்நாடு செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசின் மண் வளத்தை வலுப்படுத்தும் திட்டத்திற்கு சுமார் ₹206 கோடி பட்ஜெட் ஒதுக்கப் பட்டுள்ளது.
இந்தத் திட்ட வரைவு, விவசாய நிலங்களில் மண் ஊட்டச்சத்து மற்றும் வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உர சாகுபடியை ஊக்குவிக்கிறது.
சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் பசுந்தாள் உர விதைகளைப் பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்பதோடுஇதனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள்.
மண்-வள மேம்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிக்க ₹20 கோடி தொடக்க நிதி ஒதுக்கப் பட்டது.
மண் ஊட்டச்சத்துக்கள் மற்றும் உரப் பயன்பாடு குறித்த தகவல்களை வழங்கச் செய்வதற்காக தமிழ்நாடு ஏற்கனவே 15.25 மில்லியனுக்கும் அதிகமான மண் சுகாதார அட்டைகளை (SHC) விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது.
இந்தத் திட்ட வரைவு மாநிலத்தில் நிலையான விவசாயம், காலநிலை மீள்தன்மை மற்றும் நீண்ட கால உணவுப் பாதுகாப்பை ஆதரிக்கிறது.