1944 ஆம் ஆண்டு மத்திய கலால் சட்டத்தினை திருத்துவதற்காக, பாராளுமன்றம் 2025 ஆம் ஆண்டு மத்திய கலால் (திருத்த) மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதா சிகரெட், சுருட்டு, ஹூக்கா புகையிலை, மெல்லும் வகையிலான புகையிலை, சர்தா மற்றும் வாசனைப் புகையிலை ஆகியவற்றின் மீதான கலால் வரி மற்றும் வீத வரியை உயர்த்துகிறது.
சிகரெட்டுகளுக்கு, 1,000 குச்சிகளுக்கு 200 முதல் 735 ரூபாய் வரை இருந்த கலால் வரி 2,700 முதல் 11,000 ரூபாய் வரையில் அதிகரிக்கிறது.
மெல்லும் புகையிலைக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 100% ஆகவும், ஹூக்கா வரி 25 சதவீதத்திலிருந்து 40% ஆகவும் அதிகரிக்கிறது.
புகைபிடித்தலுக்குப் பயன்படுத்தப்படும் குழாய்கள் மற்றும் சிகரெட்டுகளுக்கான புகையிலைக் கூறுகளின் கலவைகளுக்கான வரியானது 60 சதவீதத்திலிருந்து 325% ஆக அதிகரிக்கப் படுகிறது.
மாநிலங்களவை இந்த மசோதாவை அங்கீகரித்து, இறுதி நிறைவேற்றத்திற்காக மக்களவைக்குத் திருப்பி அனுப்பியது.