மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு செல்லாது – உச்சநீதிமன்றம்
May 9 , 2021 1526 days 613 0
மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மகாராஷ்டிராவின் சட்டமானது செல்லாது என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வு ஒரு மனதாக அறிவித்துள்ளது.
இது ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சமூகமானது அந்த மாநிலத்தின் 50 சதவீத இட ஒதுக்கீட்டு வரம்பினை மீறி இட ஒதுக்கீட்டைப் பெறுவதே இதற்குக் காரணமாகும்.
மேலும் மராத்தா சமுதாயத்தினருக்கு வழங்கப்படும் தனி இடஒதுக்கீடானது சட்டப் பிரிவு 14 (சம உரிமை) மற்றும் சட்டப் பிரிவு 21 (சட்டத்தின் முறைமை) ஆகியவற்றை மீறுவதாகவும் உச்சநீதிமன்றம் கூறுகிறது.
மராத்தா இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றப்பட்டதற்கு வழிவகுத்த நீதிபதி N.G. கெயிக்வாட் ஆணையத்தின் தகவல்களும் செல்லாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
மகாராஷ்டிராவின் சமூகம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டம், 2018 என்ற சட்டத்தினைச் செல்லும் என்று அறிவித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் உச்ச நீதிமன்றம் புறக்கணித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில், மும்பை உயர்நீதிமன்றமானது மராத்தா சமூகத்தினருக்கான 16% இட ஒதுக்கீட்டு அளவினை கெயிக்வாட் ஆணையத்தின் பரிந்துரையின் படி கல்வியில் 12 சதவீதம் எனவும் வேலைவாய்ப்பில் 13 சதவீதம் எனவும் குறைத்தது.
உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இந்த குறைக்கப்பட்ட இட ஒதுக்கீடும் கூட ஒரு அதிகார மீறல் என உச்சநீதிமன்றம் தற்போது கூறியுள்ளது.